2014 வர்த்தமானி மூலம் அம்பாறையில் 86 இடங்கள் பறிபோகும் அபாயம்




இறக்­காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவ­காரம் கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக, அம்­பாறை மாவட்­டத்தில் பாரிய அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  இத்­த­னைக்கும் காரணம் தீக­வாபி பற்­றிய அச்­சு­றுத்­த­லாகும். 

பேரி­ன­வாதம் இலங்கை முழு­வ­தையும் சிங்­கள மய­மாக்­கு­வதில் எவ்­வ­ளவு தூரத்­திற்கு சிந்­திக்­கி­றது என்­ப­தற்கு, 2014 ஒக்­டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் அறி­விப்புச் செய்­துள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் தகுந்த சான்று.

2014 ஒக்­டோபர் 10 வர்த்­த­மானி அறி­வித்தல்

குறித்த வர்த்­த­மானி, கிழக்கு மாகா­ணத்தில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான 246 இடங்கள் பற்றி அறி­விக்­கி­றது. தேசிய மர­பு­ரி­மைகள் அமைச்சர் ஜகத் பால­சூ­ரிய கையொப்­ப­மிட்டு, மஹிந்த அர­சாங்கம் அறி­விப்புச் செய்­துள்ள இந்த வர்த்­த­மா­னியில், திருக்­கோவில் பிர­தேச செய­லாளர் பிரிவில் 36 இடங்­களும், இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரிவில் 13 இடங்­களும், ஆல­ய­டி­வேம்பு பிர­தேச செய­லாளர் பிரிவில் 9 இடங்­களும், பொத்­துவில் பிர­தேச செய­லாளர் பிரிவில் 5 இடங்­களும், அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் 6 இடங்­களும், அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரிவில் 11 இடங்­களும், சம்­மாந்­துறை பிர­தேச செய­லாளர் பிரிவில் 4 இடங்­களும், கல்­முனை பிர­தே­சத்தில் 2 இடங்­க­ளு­மாக முஸ்லிம், தமி­ழர்­க­ளுக்­கு­ரிய 86 இடங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 
குறித்த வர்த்­த­மா­னியில் சிங்­களப் பிர­தே­சங்­க­ளான பதி­யத்­த­லாவை, லகு­கல, தமண, அம்­பாறை, உகன, மகா­ஓயா, தெஹி­யத்த கண்டி முத­லான இடங்­களும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு குறிப்­பி­டும்­ப­டி­யான எந்தப் பாதிப்பும் ஏற்­படப் போவ­தில்லை. பிரச்­சி­னைக்­கு­ரிய இடங்­க­ளாக குறி­வைக்­கப்­ப­டு­வது முஸ்லிம், தமி­ழர்­க­ளுக்­கு­ரிய பூர்­வீக நிலங்­கள்தான் என்­பதை இன்று வட­கி­ழக்கில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெறும் சம்­ப­வங்­களைக் கொண்டு உறு­தி­யாகக் கூற முடியும்.

இறக்­காமம் சிலைப் பதிப்­புக்கு சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­ட­தாகக் கூறப்­படும் அமைச்சர் தயா­க­மகே விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில், கல்­முனை தொடக்கம் பொத்­துவில் வரைக்கும் தீக­வா­பிக்கு சொந்த­மாக 12,000 ஏக்கர் காணிகள் உள்­ளன என்று குறிப்­பிட்­டி­ருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.