உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது



உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனான வரிஅறவீட்டு நிர்வாகத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ம் வாரத்தில் இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்