Headlines
Loading...
எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 9 ஆம் திகதி அறிவிப்பு : வாசுதேவ நாணயக்கார

எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 9 ஆம் திகதி அறிவிப்பு : வாசுதேவ நாணயக்கார



கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைகர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றபோதும் அதுதாெடர்பில் பொதுஜன பெரமுன எந்தவிதமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளாமல் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்காமல் இருப்பது, தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலா இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏனெனில் தேர்தல் எதுவும் இடம்பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது.

இருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி என்றவகையில் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து இதுதொடர்பாக எமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தோம். அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சிறிய காலமே இருக்கின்றது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இறுதி நேரத்தில் வேறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் எமக்கு செய்வதறியத நிலை ஏற்படும் என தெரிவித்தோம்.

எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்திது இதுதொடர்பாக ஆராய தீர்மானித்திருக்கிறார். இந்த சந்திப்பில் பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்று கொள்கையளவில் தீர்மானத்துக்கு வரும் சாத்தியம் இருக்கின்றது. 

அதனால் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைவர்கள் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், லங்கா சமசமாஜ கட்சி, பிரபா கணேசனின் கட்சி ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை தீர்மானிக்க இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

0 Comments: