Headlines
Loading...
இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்  சுகயீனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..!

இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..!


சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் அரச துறையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் சுகயீனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த இரு தினங்களிலும் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் மாத்திரமல்லாது, பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கங்கள், ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் அதிகாரிகள் சங்கங்கள் என்பனவும் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Comments: