மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாந்துறை பிரதேசத்தில் முதியவர் ஒருவர் மா மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாந்துறை உடையார் வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய கணவதிப்பிள்ளை நாகராசா என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவருக்கும் அவரது மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிள்ளைகளுடன் மகள் வீட்டை விடடு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இரவு தனது தந்தையாரை சென்று பார்த்து வருமாறு 17 வயதுடைய மகனை அனுப்பியுள்ளார் .
மகன் அங்கு சென்றபோது வீடு இருட்டாக இருந்ததையடுத்து மின்விளக்குகளை ஒளிரச் செய்தபோது அம்மப்பா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு உடனடியாக தாயார் மற்றும் உறவினருக்கு தெரிவித்தார்.
அதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
