அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்றவர்களே உங்களின் ஒத்துழைப்பு அவசியம்!

ADMIN
0


கடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்கொண்டிருந்தவர்கள் தமது விபரங்களை தத்தமது பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தி பரிசோதனை செய்வதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்.

உங்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது கணக்கில் எடுக்க முடியாத இலேசான சில அறிகுறிகள் இருக்கலாம். ஆயினும், உங்களிடம் இருந்து ஏனையோருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் பரவக்கூடும்.

அத்துடன், அவ்வாறானவர்கள் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தம்மை சுய தனிமைப்படுத்துவதும் அவசியமாகும்.

ஒன்றுபட்டு எமது பிராந்தியத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்!
Dr. N. Ariff,
Regional Epidemiologist,
Office of RDHS,
Kalmuna

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default