நீதி அமைச்சர் அலிசப்ரியின் கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு.




சமூக இடைவெளிகளைப் பேணி நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வழக்குகளை விசாரிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 55 மடிக்கணினிகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நீதி அமைச்சர் அலிசப்ரியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளிகளைப் பேணி வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குமான நீண்டக்கால நடவடிக்கையின் மற்றொரு நடவடிக்கையே இது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்