
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை (16) மாலை இடம்பெறவுள்ளதென கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு, நாளை (16) மாலை 4 மணியளவில் இடம்பெறுமென கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
‘புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை 2020 டிசம்பர் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்தது. அதன்பின்னர், 2021 பெப்ரவரியில், நிபுணர் குழுவை சந்தித்தது. இதை முன்கொண்டு செல்வது சம்பந்தமாகவே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்