பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து ஜனாதிபதிக்கு கடிதம்


பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


டலஸ் அலகப்பெரும, விஜயதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்களை சுயாதீன குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.