அமைச்சர் அலி சப்ரி இன்று கூறியதையே அன்று நானும் கூறினேன்..


2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் பதில் உரையின்போது அமைச்சர் அலி சப்ரி இன்று கூறியதையே தானும் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


நிதியமைச்சர் அலி சப்ரி இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் விசேட உரையாற்றினார்.


இதன்போது, சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்றும் இது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் கூறினார். அத்தோடு, வரி குறைப்பும் பாரிய தவறு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிலையில், நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றியபோதே அலி சப்ரி கூறியதையே 2020ஆம் ஆண்டு தானும் கூறியதாக ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், அப்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறாயினும், இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.