ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று(02) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


இதேவேளை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.