மகிந்த ராஜபக்ச, அன்றே ஓய்வு பெற்று வேண்டும்... அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவே அவருக்கு இப்போது இந்த நிலைமை.. ; சமல் ராஜபக்ச தெரிவிப்பு


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் இரண்டாவது

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


"கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.


அரசியலில் ஈடுபடுபவர்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


"நாம் அதிகாரத்திற்கும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.