ராஜபக்ஷ கும்பலால் நேற்று தாக்கப்பட்ட வீரமங்கை : பாத்திமா மொரீன் நூர்!

 


அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு இன்று (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தாக்குதல் நடத்தியவர்கள் தம்மை திட்டி தாக்கியதாகவும், தான் தனி நபராக இருந்து போராடியதாகவும், தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.