எதிர்வரும் 2 நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டிற்கு...

 


எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்றுக்காக முன்பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும் , எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.