உணவு மற்றும் சுகாதாரத்திற்காக 50 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்குகிறது அவுஸ்திரேலியா. I




இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய அரசு 50 மில்லியன் டொலர் தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.


இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.




மருந்துகள், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு கடும் நெருக்கடி நிலவி வருகிறது.




இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு அவுஸ்திரேலியா 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


அவுஸ்திரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதில் வலுவான முக்கியத்துவத்துடன், சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்புக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது