மன்னார் காற்றாலை திட்டத்தை அதானிக்கு வழங்குங்கள் என்று தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுக்கிறேன் ; ஜனாதிபதி


கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின்

தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


'' மன்னார் காற்றாலை திட்டத்தை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி வற்புறுத்துகிறார். அதனை அதானிக்கு வழங்குங்கள் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார்'' - இலங்கை மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ கோப் கூட்டத்தில் தெரிவித்தார்.


இதனை அடுத்து,மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.