“நாட்டுக்கு இழைத்த குற்றத்திற்காக பசிலை சிறையில் அடைக்க வேண்டும்” – ரத்ன தேரர்!


நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தேரர் இக் கருத்தை தெரிவித்தார்.

“குடும்ப அரசியலை முன்னின்று வழிநடத்தியவர், இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவ்வாறான விடயங்களை செய்த ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியுமா ? தமக்கு எந்த பொறுப்பும் இல்லை என ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்திவிட்டு சிரித்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார், இன்று நாட்டில் அவரை பற்றி எந்த விவாதமும் இல்லை என்றும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.