புத்தளத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு.

 புத்தளத்தில் சமூக சேவையில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி விருது வழங்கி நேற்று கௌரவிக்கப்பட்டனர்.


இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளன.


இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் புத்தளம் மாவட்ட விசேட ஒன்னுகூடல் இன்று புத்தளம் ICE TALK மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே குறித்த ஒன்பது பேரும் கௌரவிக்கப்பட்டனர்.


பேரவையின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் பஹத் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பேரவையின் அங்கத்தவர்களான சமாதான நீதவான்களும் கலந்துகொண்டனர்.


இதன்போது புத்தளத்தில் அரசியல், சமூக சேவை மற்றும் ஊடகத்துறையில் பிரகாசிக்கும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் " தேசகீர்த்தி " பட்டம் வழங்கி பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.


ஊடகவியலாளர்களான ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம் மற்றும் ஆர்.எம்.சப்ராஸ் ஆகியோர் மூன்று ஊடகவியலாளர்களே இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன், இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் இந்த ஒன்றுகூடலில் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றுகூடலுக்கு வருகை தந்த சமாதான நீதிவான்களுக்கும் சான்றிதழ்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.