21ஆம் திகதி முதல் எரிபொருள் பாஸ் முறையில் விநியோகிக்கப்படும்... ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படும்.


ஜூலை 21ஆம் திகதி தொடக்கம் சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அத்தோடு, வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய,

மோட்டார் சைக்கிள்: 1,500 ரூபா


முச்சக்கர வண்டி: 2,000 ரூபா


கார் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள்: 7,000 ரூபா