சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 


தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 


அதனடிப்படையில், வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.