ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழு நியமனம்

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.


அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றில் குறிப்பிடப்பட்ட விடயத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியதுடன், அது குறித்து விசாரணை நடத்துமாறும், ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.


இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவிடம், இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.