பாராளுமன்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு,
பல SJB,
TNA மற்றும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்த போதிலும் தாங்கள் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளோம்" என தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்