வாரத்துக்கு இரண்டு தடவை மாத்திரமே எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள்!


வாகனங்களின் பதிவு இலக்கங்களுக்கு அமைய வாரத்தில் ஏழு நாட்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வழங்கப்படுவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 13,200 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வெளியிடுவதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிடுகின்றார்.


தேவைக்கேற்ப போதிய எரிபொருள் தொகையை வழங்காமல் வரிசையை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)