சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 470 லீற்றர் பெற்றோல் பறிமுதல்

 




புத்தளம் மற்றும் ஹொரண பிரதேசத்தில் உரிமம் இன்றி பெற்றோல் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அவர்களிடம் இருந்து 470 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


லொறி மற்றும் முச்சக்கர வண்டியில் எரிபொருள் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் 38, 19 மற்றும் 25 வயதுடைய மதுரங்குளிய, இத்தகொட மற்றும் பண்டாரகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.


சந்தேகநபர்கள் புத்தளம் மற்றும் ஹொரண நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.