ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி உள்ளிட்ட 7 சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள லஹிரு வீரசேகர மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.