கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்வது ஏன்?


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் எமது நாட்டுக்குப் பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை” – என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


இராஜதந்திரக் கடவுச்சீட்டின் மூலமாக கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தமது நாட்டில் தங்குவதற்கான அனுமதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தாய்லாந்து அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


எனினும், கோட்டாபய ராஜபக்ச எப்போது தாய்லாந்து வருவார் என்று அவர் தெரிவிக்கவில்லை.