எதிர்கால எரிபொருள் வருகை தொடர்பில் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிபொருள் இருப்புக்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டுக்கு வரவிருக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த அறிவிப்பை வழங்கிய அமைச்சர், 100,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இலங்கை வந்ததும் தரமான மாதிரி எடுக்கப்படும் என்று கூறினார்.

120,000 மெட்ரிக் டன்கள் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு ஆகஸ்ட் 23 முதல் 29ம் திகதிக்குள் வரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


இரு இறக்குமதிகளும் ரஷ்ய யூரல் கச்சா எண்ணெய் என்பதை அமைச்சர் ஒரு ட்வீட் மூலம் உறுதிப்படுத்தினார். இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயற்படத் தொடங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில், வியாழன் (11) 35,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றுமதி வந்ததாகவும், 12 ஆம் திகதி முதல் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டதாகவும் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.