அரச ஊழியர்களுக்கு 05 வருடகாலம் விடுமுறை


2022 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்காக சிரேஷ்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. 


குறித்த குழுவால் உயர்ந்தபட்சம் 05 வருடகாலம் வரைக்கும் சம்பளமற்ற விடுமுறை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.