ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!




மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.




முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.