அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவிப்பு!
September 27, 2022
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு வருகை தந்து கடமைகளை நிறைவேற்றும் போது அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து வருகை தர அனுமதிக்குமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் சில நிறுவனங்களின் தலைவர்கள் பெண் உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரியை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான சுற்றறிக்கை கீழே,