நாளை எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது ; உணவக உரிமையாளர்கள் சங்கம்


நாளை (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும்

 பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும், நகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு குறித்த நன்மை கிடைப்பதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தொிவித்தார்.


இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.