சவப்பெட்டிகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.


அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.