பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருக்கும் திலினியிடம் தொலைப்பேசி கண்டுபிடிப்பு!



பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் சிறைச்சாலை அவசர நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.