எரிபொருள் விலையில் இன்று திருத்தம்


எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ளன கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு, எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் மேற்கொண்டது, அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இறுதியாக ஜூலை 17 அன்று திருத்தம் செய்யப்பட்டது.


அன்று முதல் இது வரை நான்கு தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வேண்டியிருந்த போதிலும் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.