கொட்டகலையில் பெரும் தீப்பரவல்

 



கொட்டகலை நகரிலுள்ள தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 


தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் பொதுமக்களும், பொலிசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.


இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவி இருப்பதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். 


தீப்பரவலுக்கான காரணம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், மின்னொழுக்காக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கொட்டகலை பொலிசார் அய்வரிக்கு தெரிவித்தனர்.