🔴அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்





அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.


அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன.


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்று (04) அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து நீர் விநியோக ஊழியர்கள் விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.