கல்வி அமைச்சு வெளியிடவுள்ள புதிய சுற்றறிக்கை....!







இடைநிலை வகுப்புகளுக்கான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட உள்ளது.



தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, இந்த வாரம் பாடசாலை தவணை விடுமுறை திருத்தத்துடன் புதிய கால அட்டவணையையும் கல்வி அமைச்சு வெளியிடும் என்றும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.