பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம்!


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அதற்கிணங்க, யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் எனவும் விடயங்கள் குறித்து கலந்துரையாடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.