பெட்ரோல், டீசல் கோட்டா அளவு அதிகரிக்கப்பட்டது - எந்த வாகனத்திற்கு எவ்வளவு? பட்டியல் இணைப்பு


புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.




முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராக


பேருந்துகளுக்கு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராக


கார்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராக


லொரிகளுக்கு 50 லீட்டரில் இருந்து 75 லீட்டராக


சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராக


வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராக


land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக


quadric cycle 4 லீட்டரில் இருந்து 6 லீட்டராக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.