🔴SJB , UNP இணை இணைக்கும் முயற்சி தோல்வி ! விரைவில் புதிய அமைச்சரவை நியமணம்


ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தம்முடனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமை பதிலளிக்காத காரணத்தினால் அந்த யோசனையை கைவிட நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி செய்தி அனுப்பியதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தினை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் அரசில் இணைவார்கள் எனவும் அவர்களையும் பொதுஜன பெரமுன கட்சியையும் இணைத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் என கூறப்பட்டது.