🔴19 வயதுடைய இளம் ஜோடி மாயம்!


அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். 


இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 


காணாமல் போனவர்களை தேடி வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.