🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்


குறைக்கப்பட்ட பால் மாவின் விலை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் பிறகு மற்ற மாகாணங்களுக்கும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


200 ரூபாவால் குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதியில் எழுதப்படும் என சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.


வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவித்தார்.


எவ்வாறாயினும், ஆர்டர் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் நுகர்வோருக்கு பால் மாவை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.