🔴பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக குஷானி ரோஹந்தீர நியமனம்


தலைமைப் பணியாளர் மற்றும் பாராளுமன்ற துணைப் பொதுச் செயலாளரான குஷானி ரோஹந்தீர பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குஷானி ரோஹந்தீரவை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.


சட்டத்தரணி குஷானி ரோஹந்தீர, 2020 டிசம்பரில் பாராளுமன்றத்தின் தலைமைச் செயலாளராகவும் பிரதிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.


2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் (நிர்வாக சேவைகள்) ஆகவும் பணியாற்றினார்.


1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற அதிகாரியாக பாராளுமன்ற சேவையில் இவர் இணைந்தார்.