மின்சார விநியோகம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து சேவை வேலைகள் என்பன இதனால் அத்தியாவசிய சேவைகளாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.