🔴கடந்த நீண்ட வார இறுதியில் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்


கடந்த நீண்ட வார இறுதியில் மொத்தம் 18,728 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஜூலை 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கைக்கு அமைய கணக்கிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதேவேளை, இக்காலப்பகுதியில் தாமரை கோபுரத்தை பார்வையிட 367 வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்ததாகவும் தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கடந்தாண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி இந்த கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் மொத்தம் 953,918 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதுடன் அவர்களில் 18,320 வெளிநாட்டவர்கள்.