மூடப்பட்டது தாஜ்மஹால்..

ADMIN
0 minute read
0


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானோர் வருவதாக தெரிவித்துள்ள இந்திய கலாசார அமைச்சகம், அதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவது அவசியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளொன்றுக்கு சுமார் 70,000 பேர் வரை அங்கு செல்கின்றனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)