இலங்கையை நோக்கி அதிரடியாக வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள்..

ADMIN
0 minute read
0

இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்தன.

கொவிட் 19 வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பையின் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த கப்பல்கள் மூலம் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்களுக்கான பொருட்களையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவ்வாறு வருகைத்தந்தவர்களுக்கு நாட்டுக்குள் கால்பதிக்க அனுமதிக்க வழங்கப்படவில்லை என்பதோடு கப்பலில் பயணிக்க தயாரான பிலிப்பீனியர்கள் அனைவரும் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளன.
To Top