2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 10,000 ஆக மட்டுப்படுத்தியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை ஹஜ் யாத்திரைக்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சவூதியில் வசிப்பவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என்றும் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சு ஏலவே அறிவித்திருந்தது.