நாளை தேர்தல்: மீண்டும் தீவிரவாத தாக்குதலா? பதற்றத்தில் பிரான்ஸ் மக்கள்



பிரான்ஸில் நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ளதால் வரலாறு காணாத அளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களாக களத்தில் ஐந்து பேர் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிசெய்யக்கூடும் என்பதால் பிரான்ஸில் தற்போது பதற்றம் நிலவுகிறது.

இருதினங்களுக்கு முன்னர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த Karim Cheurfi (39) என்னும் தீவிரவாதி ஒரு காவலரை சுட்டுக்கொன்றான்.
இந்த தாக்குதலில் மேலும் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்புள்ளதால், அங்கு பொலிஸ் பாதுகாப்பு வரலாறு காணாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது