இன்று இலங்கை நாட்டில் எந்த வித ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுமின்றிஎரிபொருள் தட்டுப்பாடு நிலவி நாடே ஸ்தம்பித நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதானது, இவ்வரசின் ஆட்சிக் குறைபாடின்றி வேறில்லையெனபராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலம் ஒருபொற்காலம் என்பதை இவ்வரசு காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலவிடயங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதில் ஒன்று தான் இலங்கையில் நிலவிக்கொண்டிருக்கும் எரிபொருள்தட்டுப்பாடாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக்காலமான யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்தில் கூட எரி பொருள் தட்டுப்பாடு நிலவியசரித்திரமில்லை. அப்படித் தான் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சி அமைந்திருந்தது.
இன்று இலங்கை நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. யாரும்வேலை நிறுத்தம் செய்யவில்லை. இப்படியான எரிபொருள் தட்டுப்பாடு எதனால்ஏற்பட்டது என்ற காரணத்தை கூட வெளியில் கூறாமல் இவ்வரசு மறைக்கின்றது.அதற்கான காரணத்தை வெளியில் கூறினால் மக்கள் தங்களது ஆட்சியை பார்த்துசிரித்து விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.
சில நாட்களாக இவ் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் இவ்வரசுஅவசரமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. எரிபொருள் தட்டுப்பாடுநிலவினால் நாடே ஒரு கனம் ஸ்தம்பித்துவிடும். தற்போது இலங்கை நாடு அரைஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கனமும் பல கோடிபொருளாதார இழப்புக்கள் ஏற்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில்இவ்வரசானது அக்கறையற்ற விதத்தில் செயற்படுவதானது இலங்கை நாட்டின்எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது இவ்வரசின்ஆட்சிக் குறைபாடின்றி வேறு ஏதுமில்லை.